Wednesday 19 October 2016

காவேரி காக்க துறவியர் யாத்திரை

காவிரியின் புனிதம் காக்க மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை அகில பாரத துறவியர் சங்கம் ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கிறது. குடகு மலைச் சாரலில் காவிரியின் பிறப்பிடமான தலைக்காவேரியில் அக்டோபர் 23ம் நாள் தொடங்கிய இந்த யாத்திரை நவம்பர்-11 அன்று காவிரி கடலில் கலக்குமிடமான பூம்புகாரைச் சென்றடையும்.


அக்டோபர் 23ம் நாள் நடைபெற்ற தொடக்க விழாவில் ஸ்ரீ விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமிகள் (உடுப்பி பெஜாவர் மடாதிபதி), தவத்திரு சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் (காசி மடம், திருப்பனந்தாள்), தவத்திரு மருதாசல அடிகளார் (பேரூர் ஆதீனம்), சுவாமி கேசவானந்த மகராஜ் (ராமகிருஷ்ண மடம், கோவை) உள்ளிட்ட துறவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த யாத்திரையில் 20க்கும் மேற்பட்ட துறவியர்கள் & மடாதிபதிகள் தொடக்கம் முதல் கடைசி வரை பங்கேற்று காவிரிக் கரையில் உள்ள புனிதத் தலங்களையும் தரிசித்து வருகிறார்கள். செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே தங்கி காவிரி நதியின் புனிதத்துவத்தை உணர்த்தும் வகையில் காவேரித் தாய்க்கு பூஜையும் சிறப்பு வழிபாடுகளும் செய்து வருகிறார்கள். இவ்விடங்களில் காவிரியைப் பாதுக்காப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், பஜனைகள் போன்ற நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் ஆங்காங்கே பல இந்து சமயப் பிரிவுகளயும் சார்ந்த பல்வேறு துறவியர்கள் கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்கள். இது வரையில் யாத்திரை சென்றவிடங்களில் எல்லாம் மக்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.
யாத்திரை நிகழ்ச்சிகளின் போது கீழ்க்கண்ட கருத்துக்கள் பேச்சாளர்களால் வலியுறுத்திப் பேசப் படுகின்றன.
தமிழகத்தில் யாத்திரை செல்லும் வழி மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள்:
நவம்பர்-2 (புதன்): ஒகேனக்கல்
நவம்பர்-3 (வியாழன்): மேட்டூர்
நவம்பர்-4 (வெள்ளி): பவானி
நவம்பர்-5 (சனி): கரூர்
நவம்பர்-6 (ஞாயிறு): திருஈங்கோய்மலை
நவம்பர்-7 (திங்கள்): முசிறி, ஸ்ரீரங்கம்
நவம்பர்-8 (செவ்வாய்): திருவையாறு
நவம்பர்-9 (புதன்): கும்பகோணம்
நவம்பர்-10 (வியாழன்): மயிலாடுதுறை
நவம்பர்-11 (வெள்ளி): பூம்புகார்
இவ்விடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தவத்திரு காசிவாசி. முத்துக்குமாரசுவாமி தம்பிரான் (திருப்பனந்தாள்), சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் (திருவாவடுதுறை), ஸ்ரீமத் சுவாமி திவ்யானந்த மகாராஜ் (ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை), பூஜ்ய சுவாமி ஓங்காரானந்தா (சித்பவானந்த ஆசிரமம், தேனி), பூஜ்ய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் (தன்வந்தரி ஆரோக்கிய பீடம், வாலாஜாபேட்டை), ஸ்ரீமத் சுவாமி ஆத்மானந்தா, சுவாமி ராமகிருஷ்ணானந்தா, (ராமகிருஷ்ண மடம்), சுவாமி சைதன்யானந்தா (விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை), மாதாஜி ஸ்ரீவித்யாம்பா சரஸ்வதி உள்ளிட்ட பல துறவியர் கலந்து கொள்கின்றனர். பாரதீய கிஸான் சங்கம் என்ற அகில பாரத விவசாயிகள் அமைப்பின் தலைவர்களும், செயலாளர்களும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றனர்.
நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் கீழே காணலாம்.
மாசு படிந்திருக்கும் காவேரியைத் தூய்மை செய்து அதன் புனிதத் துவத்தை மீட்பது என்பது சாதாரண பணியல்ல. மத்திய, மாநில அரசுகள், காவிரி செல்லும் வழியிலுள்ள நகராட்சி ஊராட்சி அமைப்புக்கள், சூழலியல் அமைப்புகள், நதிநீர்த் துறை நிபுணர்கள், விவசாயப் பெருமக்கள், தொழில் அமைப்புகள், திருக்கோயில்கள், மடங்கள், இந்து சமய ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பன்முக ஒத்துழைப்புடன் செய்ய வேண்டிய மாபெரும் பணி இது. துறவியரின் இந்த யாத்திரை அத்தகைய பணிக்கான தேவை பற்றிய விழிப்புணர்வை சம்பந்தப் பட்ட அனைத்துத் துறையினரிடமும் கட்டாயம் உருவாக்கும் என்று நம்புவோம்.














நன்றி: www.tamilhindu.com

No comments:

Post a Comment