Sunday 23 October 2016

சட்டங்கள் தீர்ப்புகள் - வரி செலுத்துவோர் சங்கம்

பிப் 26 2016

சென்னை: நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படக்கூடாது என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது.

2015ம் ஆண்டு சிவகாசியை சேர்ந்த வரி செலுத்துவோர் சங்கம் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலைகளை பலர் ஆக்கிரமித்துள்ளதாகவும் அவர்களுக்கு தமிழக அரசு பட்டா வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2001ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தமிழக அரசு இது தொடர்பாக ஏராளமான அரசாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் ஆனால் தொடர்ந்து அரசு பட்டா வழங்குவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு வியாழனன்று விசாரணைக்கு வந்த போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பிற்கு எப்படி பட்டா வழங்கலாம் என ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் வெள்ளிகிழமை விளக்கமளிக்கப்பட்டது.

அதில் கடந்த 2007ம் ஆண்டு நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பதிலுக்குப் பிறகு, இனிமேலும் எந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கும் பட்டா வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற தலமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

நன்றி: தினமலர் 

No comments:

Post a Comment