வானில் இருந்து வரும் ஒரு சொட்டு நீரையும் மனிதனுக்குப் பயன்படாது கடலில் சேர விட மாட்டேன் என்ற இலங்கை மன்னனின் கூற்றை இன்றைய நவீன இந்தியாவி உயிர்ப்பித்துக் கொண்டிருக்கும் சூழலியல் செயற்பாட்டாளர் அனுபம் மிஷ்ரா.
இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.
காந்தி சமாதான நிறுவனத்தின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவர். நவீன இந்தியாவின் சூழலோடு போராடும் தண்ணீர் மனிதன். வழக்கிழந்து போய்க் கொண்டிருக்கும் புராதன மழை நீர் சேகரிப்பு முறைமைகளை ஆய்வு செய்து வருபவர்.
இந்தியாவின் பாலை வனங்களில் அக்கால மக்கள் எவ்வாறு தமது விவசாய நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக மிக எளிமையான அழகியலுடன் கூடிய கட்டிட முறைமைகளைக் கையாண்டார்கள் என்பது பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா முழுதும் அவர்மேற் கொண்ட பயணங்கள் மூலம் மழை நீரைப் பயன்படுத்தியே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதனை மிக வலுவாக நம்புகிறார்.அவரது பயணங்களின் மூலமாக அவர் சந்தித்த மக்களுடான உரையாடல்களின் மூலமாக நவீன இந்தியாவில் இது மிக சாத்தியமானது என்பதனை நிரூபிக்கிறார்.
நவீன நீர் முகாமைத்துவத் தொழிற் நுட்ப முறைமைக்கும் புராதன இந்தியாவின் நீர் முறைமைக்கும் இடையே பாலமாகத் தொழிற்படுகிறார்.
Contact Details:
Gandhi Peace Foundation
221 - 223, Deendayal Upadhyaya MargNew Delhi 110 002
Tel: 23237491, 23237493
No comments:
Post a Comment